வேறு மாப்பிள்ளையா? காதலி கண்முன்னேயே தன்னைதானே கத்தியால் குத்தி கொண்ட திண்டுக்கல் இளைஞர்
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்,
Recommended Video

திண்டுக்கல்: காதலி தனக்கு கிடைக்காத காரணத்தினால் இளைஞர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்திகொண்டு அனைவருக்கும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். டிப்ளமோ படித்துள்ளார். கரூரில் உள்ள ஒரு டயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு ஃபேஸ்புக் காதலாம். அந்த பெண் நிலக்கோட்டையை சேர்ந்தவர். எம்.காம். படித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஃபேஸ்புக் தொடர்ந்துள்ளது. அடிக்கடி இருவரும் நேரிலும் பார்த்து பேசி வந்துள்ளனர். தாம் விரும்பிய அந்த பெண்ணை திருமணமும் செய்ய சுரேஷ்குமார் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக தனது காதலை வீட்டில் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். அவர்களும் மகனின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்க மனமில்லாமல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்,
ஆனால் பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதி பிரச்சனை அந்த பெண்ணின் வீட்டிலும் வெடித்துள்ளது. சுரேஷ்குமார் வேறு சமூகத்தவர் என்பதால் காதலை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவரது வீட்டில் பார்த்துள்ளதாக சுரேஷ் கேள்விப்பட்டுள்ளார். இதனால், காதலியை பார்ப்பதற்காக இன்று காலை நிலக்கோட்டை சென்றார். ஆனால் தன் பெண்ணை பார்க்க அனுமதிக்க மாட்டோம் என பெற்றோர் சுரேஷ்குமாரை தடுத்தனர். இதனால் வீட்டு வாசலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த சுரேஷ்குமார், தன்னிடமிருந்த கத்தியால் தன்னை தானே 3 முறை குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்த கத்திக் குத்தினால் சுரேஷ்குமாரின் உடலிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கியது. இதனை கண்ட பெண்ணின் பெற்றோர், படுகாயமடைந்து நிலைகுலைந்த சுரேஷ்குமாரை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலி கண்முன்னே கத்தியால் இளைஞர் குத்தி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications