கனமழை எச்சரிக்கை.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!
கனமழை எச்சரிக்கையை அடுத்து பேரிடர் மீட்பு படை தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளது.
சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து பேரிடர் மீட்பு படை தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தற்போது தமிழகம் முழுக்க பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பயிற்சி பெற்ற வீரர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர். நேற்று இவர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தினார்கள். மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ள தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், திருவள்ளூர், ஈரோடு பகுதிகளில் ஒத்திகை நடத்தினார்கள்.
பேரிடர் உதவிகளுக்கு சிறப்பு உதவி எண் 077 என்ற டோல் பிரீ எண் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் எல்லா போலீஸ் நிலையங்களிலும் இதற்காக தனியே போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பேரிடர் குறித்த புகார்களை கவனிக்க உள்ளார்.
எல்லா மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications