ஊராட்சித் தலைவரை மிரட்டிய வழக்கு – சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட 3 பேர் விடுதலை
மன்னார்குடி: மன்னார்குடியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட மூவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது மன்னார்குடி நீதிமன்றம்.
நீடாமங்கலம் அருகே உள்ள ரிசியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ் ஆர்வர். இவர் தன்னை சசிகலா சகோதரர் திவாகரன் தூண்டுதலின் பேரில் அப்பகுதியைச் சேந்த இருவர் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக நீடாமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து திவாகரன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த மாதம் திருவாரூர் நீதிமன்றத்தில் இருந்து மன்னார்குடி நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மன்னார்குடி நீதிமன்றத்தில் இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி சிங்காரவேல் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications