போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை ரிலீஸ் செய்த திவாகரன் மகன் ஜெயானந்த்
போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை இன்று வெளியிட்டார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
Recommended Video

சென்னை: சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தாம் தொடங்கியிருக்கும் போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை இன்று வெளியிட்டார்.
தினகரன் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் பணியகம் தொடங்குவதாக அறிவித்தார்.

தினகரனின் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனும் தனியே சுற்றுப் பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தமது அமைப்பு தினகரனுக்கு எதிரானது அல்ல; அவருக்கு ஆதரவானதுதான் என ஜெயானந்த் ஃ பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
தினகரன் தனிக்கட்சி தொடங்கும்போது அதன் துணை அமைப்புகளில் ஒன்றாக போஸ் மக்கள் பணியகம் இயங்கும் என ஜெயானந்த் தரப்பு விளக்கம் தந்துள்ளது. இதனிடையே இந்த போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை இன்று ஜெயானந்த் வெளியிட்டிருக்கிறார்.
போஸ் மக்கள் பணியகம் மூலம் உறவினர்கள், அதிமுகவில் உள்ள ஆதரவாளர்களை ஒன்று திரட்டுகிறார் ஜெயானந்த். ஏற்கனவே தினகரனின் மேலூர், திருச்சி கூட்டங்களுக்கு டெல்டா மாவட்டத்தில் இருந்தே ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications