ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் தரமுடியாது.. எதுவும் நடக்கலாம் - மிரட்டும் திவாகரன்
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
சென்னை: பதவியை காப்பாற்றிக்கொள்ளவே இரு அணிகளும் இணைந்துள்ளதாகவும், இந்த இணைப்பை எல்லா எம்எல்ஏக்களும் விரும்பவில்லை என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா என்று உத்தரவாதம் தரமுடியாது என்றும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின்னர் மன்னார்குடியில் இருந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் திவாகரன்.

நிராயுதபாணி
சசிகலாவை அன்றைக்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்தவர்கள்தான், இன்றைக்கு நீக்க நடவடிக்கை எடுக்கின்றனர். பொதுச்செயலாளர் சிறையில் இருக்கிறார். நிராயுதபாணியாக இருப்பவரை ஒதுக்கலாமா?

எங்கள் எம்எல்ஏக்கள்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சம்மதமில்லை.
தினகரனிடம் 18 எம்எல்ஏக்களும், என்னிடம் 8 எம்எல்ஏக்களும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்களுக்கு இதில் விருப்பமில்லை.

வெற்றி பெறாது
கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரின் முயற்சி எப்போதும் வெற்றி பெற்றதில்லை. இதுவும் வெற்றி பெறாது. 3 பேருக்காக 122 பேரின் எண்ணத்தை மாற்றுவதா?

எல்லாம் வீணாகி விட்டது
சின்னம் முடக்க காரணமாக இருந்தவர்கள் ஓ.பன்னீர் செல்வம்தான். கட்சி முடங்க காரணமாக இருந்தவர் அவர்தான். மிகப்பெரிய கேலிக்கூத்து அரங்கேறியது. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற நாங்கள் எத்தனையோ முயற்சிகளை எடுத்தோம், அத்தனையும் இப்போது வீணாகி விட்டது போல உள்ளது.
Recommended Video


எதுவும் நடக்கலாம்
அன்றைக்கு பொதுச்செயலாளராக பதவியேற்கச் சொன்னவர்கள்தான் இன்றைக்கு நீக்குகின்றனர். இது எந்த வகையில் நியாயம். இந்த ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் தரமுடியாது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று எச்சரித்துள்ளார் சசிகலா சகோதரர் திவகாரன்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications