தீபாவளிக்கு ரஜினி, கமலுக்கு 'இலவச வேட்டி சட்டை'... அப்படின்னா ஜெயலலிதாவுக்கு?
நடிகர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்த பிறகு விஷால் - நாசர் அன்ட் நடத்தும் கூத்துக்களைப் பார்த்தால் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால்...' வழக்குச் சொல்தான் நினைவுக்கு வருகிறது.
இந்த புதிய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பது, புதிய நிர்வாகிகளின் பிரஸ்மீட்டியே தெரிந்துவிட்டது.
அதை உறுதிப்படுத்துவது போல இப்போது ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள்.

'தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் உட்பட அனைவருக்கும் அனைவருக்கும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை இனிப்பும் வழங்கப்படவுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டிற்க்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாடகக் கலைஞர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கும் இந்தப் பரிசு சேர ஏற்பாடு நடக்கிறது!'
-இதுதான் அந்த அறிவிப்பு.
ஒவ்வொரு தீபாவளிக்கும் தனது ஏரியாவில் இருக்கும் காவல் துறையினர், மின் வாரிய ஊழியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பரிசு கொடுப்பவர் ரஜினிகாந்த். அவருக்கு தீபாவளியையொட்டி இலவச வேட்டி-சேலை தரப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை.
இந்தப் பரிசுக்காகக் காத்திருப்பவர் அல்ல கமல் ஹாஸன். இந்த இரு சாதனையாளர்களையும் பெரிய அளவில் மரியாதை செய்து கவுரவிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தது விஷால் அன்ட் கோ. இதுதான் அந்த 'மரியாதை'யின் ஆரம்பம் போலி்ருக்கிறது.
ஒரு சங்கம், அல்லது யூனியன் என்று இருந்தால் பரிசுப் பொருள்கள் தருவதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால் அதை யாருக்குத் தருவதாக அறிவிப்பதென்ற விவஸ்தை வேண்டாம்?
அப்படியென்றால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். அவருக்கு இலவச சேலையும் இனிப்பு பொட்டலமும் தருவார்களா விஷால் அண்ட் கோ? அதைச் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
நலிந்த நாடகக் கலைஞர்கள், நடிகர் - நடிகைகளுக்குத் தரப் போகிறோம் என்று பொதுவாக அறிவித்திருந்தால், அதில் ஒரு நாகரீகம் இருக்கிறது.
ஆனால் இந்த 'ரஜினி, கமலுக்கு இலவச வேட்டி சேலை' அறிவிப்பு எந்த வகையில் சேர்த்தி?
முதல் கோணல் முற்றிலும் கோணலாகப் போகிறதோ!!
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications