அரசு அறிவித்த 11,959 தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... இன்று முதல் இயக்கம்
சென்னை: தீபாவளிப் பண்டிகைக்காக தமிழக அரசு அறிவித்த சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
வரும் செவ்வாய்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று முதலே சொந்த ஊர் செல்ல மக்கள் தொடங்கியுள்ளனர்.

மக்களின் வசதிக்காக தமிழக அரசு 11,959 சிறப்புப் பேருந்துகளை அறிவித்தது. இந்தப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் நவம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் மீண்டும் நவம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரையிலும் இயக்கப்பட உள்ளன.
கடந்த 4ம் தேதியே இந்தப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இதற்கென கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 25 கூடுதல் முன்பதிவு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இது தவிர கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலமும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
அதன்படி, முதல் நாளான இன்று, கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு 1106 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து 1554 கூடுதல் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
புகார் அளிக்கலாம்:
இதற்கிடையே தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு நடந்தால், அது குறித்து பொதுமக்கள் தொலைபேசியில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கென 044-2479 4709, 044 - 2674 4445 மற்றும் 044- 2474 9001 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications