அம்பேத்கர் சட்டக்கல்லூரி துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரா?... கி. வீரமணி எதிர்ப்பு!

தமிழக ஆளுநருக்கு எதிராக திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரை நியமித்துள்ளதற்கு தமிழக ஆளுநருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கையை கண்டித்து மார்ச் 27ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக தம்ம சூரியநாராயண சாஸ்திரியை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த துணைவேந்தர் நியமனம் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

DK announced protest against Tn governor on March 27

அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு இந்துத்துவா கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவரை எப்படி துணைவேந்தராக நியமிக்கலாம் என்று அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றன. இந்நிலையில் சாஸ்திரியை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் நியமித்ததற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் துணை வேந்தரா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநரைக் கண்டித்து மார்ச் 27ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் திராவிடர் கழக மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+