தேமுதிக-மக்கள் நல கூட்டணியால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: மு.க.ஸ்டாலின்
சென்னை: தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இதனால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.
மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில், அறிவாலயத்தில் இன்று ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. திமுக தனது தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்.
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி ஓரிரு நாளில் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தது. கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், அதிமுகவை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட ஒரே கட்சி திமுக மட்டும்தான் என்றார்.