யுவராஜ் போனதுமே நல்லதம்பியைக் கொண்டு வந்துட்டாருல்ல... "கேப்டன்" செம ஸ்பீடுபா!
சென்னை: வட சென்னை தேமுதிக மாவட்டச் செயலாளர் யுவராஜ் அதிரடியாக திமுகவுக்குத் தாவியைத் தொடர்ந்து வட சென்னை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி து.செயலாளர், மு.தளபதி தலைமை செயற்குழு உறுப்பினர், ப.மதிவாணன், ஆகியோர் இன்று (30.03.2016) முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டடத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலைதான் வட சென்னை தேமுதிக மாவட்டச் செயலாளர் யுவராஜ் கட்சி தாவினார். திமுகவில் இணைந்தார். அடுத்த சில மணி நேரங்களுக்குள் வட சென்னைக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து தேமுதிதக தளரவில்லை என்பதைக் காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications