மக்கள் முதல்வர் மக்களைச் சந்தித்தாரா?: கிருஸ்துமஸ் விழாவில் கேட்ட விஜயகாந்த்
சென்னை: மக்களையே சந்திக்காத முதல்வர் எப்படி மக்கள் முதல்வராக முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த, சமூக நீதி இயக்கத் தலைவர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
சிறுபான்மை மக்களை காப்பாற்றுவதாக கூறி ஏராளமானோர் ஏமாற்றுகின்றனர். அதைக் கேட்டு ஏமாந்து விடவேண்டாம் என்றார். நான் கிருஸ்துவ பள்ளிகளில்தான் படித்தேன் என்று கூறிய விஜயகாந்த், அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சாலைகள் மோசம்
தொடர்ந்து பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள 19,000 கிலோமீட்டர் நீள சாலைகளை மேம்படுத்த 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த நிதி போதாது என்றும், தமிழகத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கொசு ஒழிப்பு
மாநகராட்சியின் கொசு ஒழிப்புத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் , இத்திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்குதல், நொச்சிச் செடிகள் வாங்குதல் உள்ளிட்ட பணிகள் எதுவுமே நடக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

டாஸ்மாக் மட்டும் லாபம்
பால் விலையேற்றம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகள் இருக்க டாஸ்மாக் கடைகள் மட்டும் எந்த வித இழப்புமின்றி செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

யார் மக்கள் முதல்வர்
எல்லோரும் மக்கள் முதல்வர், மக்கள் முதல்வர் என்கிறார்கள் அவர் மக்களை சந்தித்தாரா என்றும் கேட்டார் விஜயகாந்த்.

கேக், பிரியாணி
தேமுதிக கொண்டாடிய கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்றவர்களுக்கு சுடச்சுட பிரியாணியும், கேக்கும் பரிமாறப்பட்டது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications