தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..
நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
[ ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க.. கல்லூரி மாணவி பேஸ்புக் லைவ்வில் தற்கொலை முயற்சி ]

பிறந்த நாள்விழா
பின்னர் இரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த்துக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அறிக்கைகள்
சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது அரசியல் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு தேமுதிக சார்பான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

மீண்டும் அமெரிக்கா?
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். என்றாலும் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

வழக்கமான பரிசோதனை
இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் இன்று காலை அனுமதிக்கப்பட்டர். வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் விஜயகாந்த் உள்ளதால் இன்றே வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மாலை விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications