For Daily Alerts
Just In
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- மதுரையில் டிச. 19-ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு மின் கட்டணத்தை 15% உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 19-ந் தேதியன்று மதுரையில் தமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
Comments
English summary
DMDK leader Vijayakanth said that his party will hold protest against the decision to hike power tariff in Tamilnadu.
Story first published: Saturday, December 13, 2014, 14:24 [IST]