பண்ருட்டியில் மீண்டும் வேலையை காண்பித்த விஜயகாந்த்! தொண்டருக்கு 'பளார்'!!
கடலூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தொண்டரை அவரது மனைவி, குழந்தைகள் முன் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பரபரப்பான பல காட்சிகள் தினம் அரங்கேறி வரும் நிலையில், தேமுதிக உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியை நடத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கும் . இறுதியில் கட்சித் தொண்டர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

பதற்றமில்லாமல் பண்ருட்டி வந்த விஜயகாந்த்
நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. சிதம்பரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பண்ருட்டி காடாம்புலியூரில் ஒரு திருமண மண்டபத்தில் 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் வந்தார்.

விஜயகாந்த் கோபம்
அங்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமிருந்தது. அவர்கள் தலைவர் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அதனால் முண்டியடித்துச் சென்றார்கள். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிர்ச்சியில் விஜயகாந்த்
கூட்டத்தை ஒழுங்கப்படுத்தச் சொல்லிவிட்டு, விஜயகாந்ந், அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்ததும் அப்போதும் மேடை மேல் நிறைய தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் அப்போது இல்லை.

அடிவாங்கிய தொண்டரின் சிரித்த முகம்
இதனால், மீண்டும் அவர் அறைக்குள் சென்றார். பிறகு, கூட்ட்டத்தை ஓரளவு நிர்வாகிகள் கட்டுப்படுத்தினர். அதன்பிறகு, மேடையில் தொண்டர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது, திடீரென ஒரு தொண்டரை அடித்தார். அடித்த சில நிமிடங்களிலேயே அந்த தொண்டருடன் சிரித்துப் பேசினார். தொண்டரும் அடிவாங்கியதை மறந்து சிரித்துப் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

தலைவர் இன்னும் ஹீரோதான்
தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளரை அடித்த சம்பவம் நினைவிருக்கலாம். செய்தியாளர் சந்திப்பின்போது, 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ' என்று விஜயகாந்த் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியதுண்டு. 'தலைவர் சினிமாவில் ஸ்டண்ட் மேன்களை அடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்' என அவரது தொண்டர்கள் இதை காமெடியாக நினைத்துக்கொள்கிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications