அதிருப்தியாளர்களால் சலசலப்பு... ஏப்ரல் 10ம் தேதி கூடுகிறது தேமுதிக செயற்குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வி.சி.சந்திரகுமார் அணியால் பெரும் சிக்கலைச் சந்தித்து வரும் நிலையில் தேமுதிக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ளது.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த சந்திரகுமார் தலைமையில் 10 நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விஜயகாந்த் உத்தரவிட்டார்.

DMDK meet on April 10th

இந்நிலையில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் நேற்று காலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவர்களின் கருத்துகளை விஜயகாந்த் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்த விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால், பல்வேறு மாநகராட்சிகளில் பிரேமலதாவின் பிரச்சாரக் கூட்டங்கள் நடந்து வருவதாலும், தேர்தல் பணிகளில் தேமுதிகவினர் ஈடுபட்டு வருவதாலும் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று அனைவரையும் வரச் சொல்லி அன்று செயற்குழுவில் ஆலோசனை நடத்த உள்ளது தேமுதிக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+