அம்மா.. அம்மான்னு யாராச்சும் சொன்னீங்க அவ்வளவு தான்.. மீண்டும் நாக்கை துறுத்திய விஜயகாந்த்!
அம்மா அம்மானு யாராசுக்கம் சொன்னால் அவ்வளவு தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமாசு செய்துள்ளார்.
நெல்லை : நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அம்மா, அம்மா என்று யாராச்சும் சொன்னா அவ்வளவு தான் என்று டென்ஷனாகி நாக்கை துறுத்தினார்.
நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி பிரேமலதாவுடன் வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவின் இரு அணிகள் குறித்தும் முன்னாள் மற்றும் தற்போதைய முதல்வர் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்று யாரும் என்னிடம் கேட்காதீர்கள், நாட்டிற்கு ஏதாவது நல்லது நடக்கும் என்றால் மட்டும் பேசுங்கள், இவர்களால் எந்த நல்லதும் நடக்காது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜயகாந்த் 'என்ன அம்மா அம்மா அம்மா சும்மா அம்மானு யாராச்சும் சொன்னீங்க எனக்கு செம கோபம் வரும் என்று நாக்கை துறுத்தி ஒற்றை விரலால் மிரட்டினார். ஒ.பிஎஸ் அம்மா சமாதி முன்னாடி தியானம் பண்ணாரு என்று கைகளை கூப்பியவர் அதை அப்படியே விட்டு விட்டார் இதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தான் கடைசி வரை புரியவேயில்லை

அறிவுப்பூர்வமா கேளுங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு "வேறு ஏதாவது அறிவுப்பூரவமாக கேளுங்கள், ரஜினி என்னுடைய நல்ல நண்பர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எதிர்ப்பு இருந்தால் தான் அரசியல், எதிர்ப்பினால தானே நானும் அரசியலுக்கு வந்தேன்" என்றார்.

சட்டமன்ற தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னாடி சட்டசபை தேர்தல் வருவது நிச்சயம் என்ற அவர், உள்ளாட்சி தேர்தல் வருமா என்பது சந்தேகமே என்றார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை என்றும் கூறினார்.

பழைய ஸ்டைல்
விஜயகாந்தின் இன்றைய செய்தியாளர்கள் பேச்சில் லேசாக அவரது பழைய பாணி திரும்பி வருவதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தவர் தொடர்ந்து அரசு மற்றும் ரஜினி பற்றி கேள்விகளே வந்ததால் நீங்க அறிவுப்பூர்வமா எதுவும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள் நான் புறப்படுகிறேன் என்று கைகளை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு சென்றார்.

டென்ஷன் டென்ஷன்
ஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜயகாந்த் 'என்ன அம்மா அம்மா அம்மா சும்மா அம்மானு யாராச்சும் சொன்னீங்க எனக்கு செம கோபம் வரும் என்று நாக்கை துறுத்தி ஒற்றை விரலால் மிரட்டினார். ஒ.பிஎஸ் அம்மா சமாதி முன்னாடி தியானம் பண்ணாரு என்று கைகளை கூப்பியவர் அதை அப்படியே விட்டு விட்டார் இதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தான் கடைசி வரை புரியவேயில்லைஓ.பன்னீர்செல்வம் அணியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜயகாந்த் 'என்ன அம்மா அம்மா அம்மா சும்மா அம்மானு யாராச்சும் சொன்னீங்க எனக்கு செம கோபம் வரும் என்று நாக்கை துறுத்தி ஒற்றை விரலால் மிரட்டினார். ஒ.பிஎஸ் அம்மா சமாதி முன்னாடி தியானம் பண்ணாரு என்று கைகளை கூப்பியவர் அதை அப்படியே விட்டு விட்டார் இதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது தான் கடைசி வரை புரியவேயில்லை
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications