விஜயதசமி நாளில் சட்டசபைத் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

விஜயதசமி நாளில் ஒரு செயலை தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் 2016ம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது திமுக.

ஆர்.எஸ். பாரதி, தா.மோ.அன்பரசன், பொன்முடி, பொன். முத்துராமலிங்கம், என்.பெரியசாமி உள்ளிட்ட 28 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க. தலைமைக்கழகஅறிவிப்பு:

நடைபெற உள்ள சட்டசபைப் பொதுத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்திடவும், நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.எ.-2) தங்களோடு இணைந்து பணியாற்றிட 10 முதல் 15 பேரை நியமித்து கொள்ளவும், அந்தந்த தொகுதிகளில் ஏற்படும் மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எதிராக நடத்திய, நடைபெற வேண்டிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்திட அறிவுறுத்தவும், தி.மு.க. ஆக்கப்பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் உரிய ஆலோசனைகளை சட்டசபை தேர்தல் முடியும் வரை, அவ்வப்போது தலைமைக் கழகத்திற்கு அறிக்கையின் வாயிலாகவும் - நேரடியாகவும் தெரிவித்திட மாவட்ட வாரியாக பின்வரும் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஒளிவுமறைவில்லாமல்

ஒளிவுமறைவில்லாமல்

அவர்கள், எவ்வித ஒளிவுமறைவுமின்றி அங்குள்ள குறைகள் குறித்து தலைமைக் கழகத்திற்கு அவ்வப்போது தெரிவிப்பார்கள். இத்தேர்தல் பணி பொறுப்பாளரோடு அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொறுப்பாளர்களின் பெயர்கள்.

பொறுப்பாளர்களின் பெயர்கள்.

சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஆர்.எஸ். பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு கு.பிச்சாண்டி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தா.மோ.அன்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்முடி

பொன்முடி

வேலூர் மாவட்டத்திற்கு ஆர்.காந்தி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு எ.வ.வேலு, விழுப்புரம் மாவட்டத்திற்கு க.பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்டத்திற்கு சாக்கோட்டை அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.என்.நேரு

கே.என்.நேரு

நாகை மாவட்டத்திற்கு திருவிடைமருதூர் எஸ்.ராமலிங்கம், திருவாரூர் மாவட்டத்திற்கு டாக்டர் மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி , பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொங்கலூர் பழனிச்சாமி

பொங்கலூர் பழனிச்சாமி

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சேலம் மாவட்டத்திற்கு பொங்கலூர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்திற்கு காந்திசெல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

என்.கே.கே.பி ராஜா

என்.கே.கே.பி ராஜா

தருமபுரி மாவட்டத்திற்கு செல்வகணபதி, கோவைக்கு மு.கண்ணப்பன், திருப்பூர் மாவட்டத்திற்கு என்.கே.கே.பி. ராஜா, ஈரோடு மாவட்டத்திற்கு எஸ்.ரகுபதி, நீலகிரிக்கு மு.பெ.சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

மதுரைக்கு தங்கம் தென்னரசு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இ.பெரியசாமி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கே.ஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்டத்திற்கு சத்திய மூர்த்தி, விருதுநகர்- மாவட்டத்திற்க கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொன்.முத்துராமலிங்கம்

பொன்.முத்துராமலிங்கம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொன்.முத்துராமலிங்கம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்.பெரியசாமி, கன்னியாகுமரி மாவட்டத்திற்க எஸ்.ஆஸ்டின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+