கருணாநிதி வீட்டு முன்பு குவிந்த தி்முகவினர் சோகத்துடன் கலைந்தனர்!
சென்னை: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி வழங்கப் போகும் தீர்ப்புக்காக ஆவலுடன் திமுக தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு குவிந்த திமுகவினர், தீர்ப்பைக் கேட்டதும் சோகமடைந்து அங்கருந்து கலைந்து சென்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர். நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற பதட்டம் நாடு முழுவதும் காணப்பட்டது.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்குத்தான் நிச்சயம் பாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் திமுகவினர் இருந்தனர். ஒருவேளை அப்படி தீர்ப்பு வந்தால் கருணாநிதி கருத்தை அறியவும், அதிமுகவினரால் தாக்குதல் ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், கருணாநிதி வீட்டு முன்பு திமுகவினர் பெருமளவில் குவிந்தனர்.
இதனால்கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டை சுற்றிய சாலைகள் முழுவதும் தி.மு.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது ஆனால் தீர்ப்பு அவர்களுக்கு சந்தோஷம் தராமல் போகவே சோகத்துடன் அனைவரும் கலைந்து சென்றனர்..












Click it and Unblock the Notifications