திமுக மாநாட்டால் டாஸ்மாக்குக்கு கிடைத்த வசூல் ரூ. 10 கோடி
திருச்சி: திருச்சியில் திமுக மாநாடு நடந்த இரண்டு நாட்களில் திருச்சியில் ரூ 10 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாம்.
திருச்சி மாநாட்டுக்கு வந்தவர்கள் கிட்டத்தட்ட 12.5 லட்சம் குவார்ட்டர் மதுவை வாங்கி வாயில் இறக்கியுள்ளனராம்.
வழக்கமாக அரசியல் கட்சிகளின் மாநாடுகள் நடந்தால் மது விற்பனைதான் முதலில் களை கட்டும். சமீபத்தில் நடந்த தேமுதிக, பாஜக மாநாடுகளின்போதும் கூட இப்படித்தான் மது விற்பனை அபாரமாக இருந்தது.
திமுகவினர் மட்டும் சும்மா இருப்பார்களா.. வாங்கிக் குடித்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

பிராட்டியூரில்
திருச்சியில், திண்டுக்கல் சாலையில் உள்ள பிராட்டியூரில் 10வது திமுக மாநில மாநாடு 2 நாட்களுக்கு நடந்தது. இந்த இரண்டு நாட்களும் மது ஆறாக ஓடியுள்ளது.

கடைகளில் டபுள் கரை வேட்டிகளின் கூட்டம்
திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கருப்பு சிவப்பு கரை வேட்டி கூட்டம் களேபரமாக காணப்பட்டதாம்.

பல மடங்கு வியாபாரம்
திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 213 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 1 கோடி வரை விற்பனையாகும். இதுவே சனி ஞாயிறாக இருந்தால் கூடுதலாக ரூ. 50 லட்சம் வரை விற்பனை இருக்குமாம். ஆனால் திமுக மாநாட்டையொட்டி பல மடங்கு வருவாய் கிடைத்துள்ளதாம் இந்தக் கடைகளுக்கு.

அம்மா கையைப் பலப்படுத்திய உடன்பிறப்புகள்
அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் திமுகவினர் கூட்டம் அலைமோதியபடி இருந்ததாம். ரூ. 10 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை முதலே...
வெள்ளிக்கிழமை முதலே மது விற்பனை களை கட்டி விட்டதாம். அன்றைய தினம் ரூ. ஒன்றை கோடி அளவுக்கு மது விற்றுள்ளது. அடுத்த நாள் விற்பனை சற்றே எகிறி ரூ. 3.5 கோடிக்கு விற்றுள்ளது. நேற்றுதான் உச்சகட்டமாக ரூ. 5 கோடிக்கு வாங்கிக் குடித்துள்ளனர். மொத்தமாக ரூ. 10 கோடியை அரசுக்குக் கொடுத்துள்ளனர் திமுகவினர்.

பட்.. அரசின் டார்கெட் ரூ. 15 கோடியாம்
ஆனால் அரசுத் தரப்பிலோ ரூ. 15 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று கணக்குப் போட்டிருந்தனராம். திமுகவினர் குடிக்க வசதியாக, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மது வகைகளை வாங்கி ஸ்டாக் வேறு வைத்து விற்றுள்ளனர். குடிக்க வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லி விடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்....
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications