மைதீன்கானை மாற்றுங்கள்: கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்
சென்னை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானை மாற்றக்கோரி ஏராளமான திமுகவினர் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதனையொட்டி தி.மு.க வேட்பாளர் பட்டியல் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளராக ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவரான டி.பி.எம்.மைதீன்கான் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மைதீன்கானுக்கு நான்காவது முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் இதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் இந்த தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வகாப் கடும் அதிருப்தி அடைந்தார். அதனால், அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மைதீன்கானின் உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பினர். மின்னஞ்சல், ஃபேக்ஸ் அனுப்பியும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனிடையே நேற்று பாளையங்கோட்டையில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு படையெடுத்தனர். இன்று காலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதிக்கு வந்த பாளை திமுகவினர் கூட்டமாக இணைந்து முழக்கமிட்டனர்.
கருணாநிதியின் வீட்டினை முற்றுகையிடவும் முயற்சி செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாளை திமுகவினர்,
கடந்த 15 வருடமாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வரும் டி.பி.எம்.மைதீன்கான் பொது மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று கூறினர்.
கட்சி நிகழ்ச்சிகள், ஆர்பாட்டங்கள் என எதிலுமே மைதீன்கான் பங்கேற்பதில்லை. அவரது பெயரைக் கேட்டாலே மக்களுக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் வேறு ஆளே இல்லையா? ஏன் அவருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வேட்பாளரை மாற்றாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு வலுவடைந்து வருவதால் திமுக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications