மேலும் தீவிரமடைகிறதா காவிரி போராட்டம்? 8ம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம்
இனிமேல் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய போராட்டம் எப்படி வீரியமானதாக இருக்க வேண்டும், மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழகத்தை தாண்டி தலைநகர் டெல்லியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் த
Recommended Video

சென்னை: காவிரி விவகாரம்: மே 8ல் திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாதமம் செய்து வருகிறது. நேற்று சுப்ரீம் கோரட்டில் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கின்போது மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்திற்கு கூடுதல் கால அவகாசம் கேட்டு தமிழகத்திற்கு ஷாக் கொடுத்தது.

ஏற்கனவே திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில், காவிரிக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டும் கூட மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இதற்கு மேலும் தாமதித்தால் தமிழகத்தில் பெரும் வறட்சி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் நின்றால் மட்டுமே தமிழக நலனை காக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. எனவே, வரும் 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்புவிடுத்துள்ளது.
இனிமேல் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய போராட்டம் எப்படி வீரியமானதாக இருக்க வேண்டும், மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும், தமிழகத்தை தாண்டி தலைநகர் டெல்லியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது.
காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.












Click it and Unblock the Notifications