காவிரி: திமுகவின் பிப். 23 அனைத்து கட்சிக் கூட்டம் ரத்து
காவிரி தீர்ப்புக்காக திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி தீர்ப்பு தொடர்பாக வரும் 23-ந் தேதி திமுக கூட்டியிருந்த அனைத்து கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதில் தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்தும் கர்நாடகாவுக்கு கூடுதல் நீரை வழங்கியும் உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தை வஞ்சிக்கும் இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து வரும் 23-ந் தேதி திமுக, அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தது. இக்கூட்டத்துக்கு அதிமுக, பாஜக மற்றும் கமல் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 22-ந் தேதி தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தும் என இன்று அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று திமுக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications