சாமி சத்தியமா எனக்கு தான் ஓட்டு போடணும், போடுவீங்களா?: கேட்கும் திமுக வேட்பாளர்
கடலூர்: குறிஞ்சிபாடி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் சாமி சத்தியமாக தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிபாடி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி அவர் குறிஞ்சிப்பாடியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் குணமங்கலத்தில் வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு தொண்டர்கள் பட்டாளத்துடன் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் வாக்காளர்களை பார்த்து, சாமி சத்தியமா எனக்கு தான் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பீர்களா? என்று கேட்டார். வேட்பாளர்கள் மக்களை கவர வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் பன்னீர்செல்வம் இப்படி வாக்கு சேகரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications