டிரகியாஸ்டமி கருவி மாற்றம்.. காவிரி மருத்துவமனையில் கருணாநிதி அட்மிட்
Recommended Video

சென்னை: மூச்சுக்குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, 2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
டிசம்பர் 23ம் தேதி கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று டிரகியாஸ்டமி கருவியை மாற்றி வருகிறார். அதேபோல இன்றும் கருணாநிதி காவிரி மருத்துவமனை சென்றார். இன்று அவருக்கு 4வது முறையாக டிரகியாஸ்டமி கருவி மாற்றப்படுகிறது. மாலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பேச முடியாததன் காரணம்
டிஸ்சார்ஜ் செய்தபோது, 2 வாரங்களுக்கு மட்டுமே இந்த கருவி தேவைப்படும் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை அந்த கருவியை முழுமையாக அகற்ற முடியவில்லை. இதனால்தான், கருணாநிதியால் பொது இடங்களில், பேச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரகியாஸ்டமி சிகிச்சை முறை
டிரகியாஸ்டமி சிகிச்சை என்றால் என்ன: தொண்டையின் நடு பகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை டிரகியாஸ்டமி (tracheostomy) என்று அழைக்கப்படுகிறது.

கருவி பொருத்த காரணம் என்ன
தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், டிரகியாஸ்டமி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

கழுத்தில் இணைப்பு குழாய்
தொண்டையில் ஓட்டை போட்டு டியூபை பொருத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும். தொண்டையில் பொருத்தப்படும் டியூபை தேவைப்படும்போது எடுத்துவிடுவார்கள். தேவைப்படும்போது பொருத்திக்கொள்வார்கள். ஆனால் தொண்டையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே இருக்கும்.












Click it and Unblock the Notifications