திமுக முடிந்து போன கேஸ்.. திமுகவை அழிக்க அதன் பட்டத்து இளவரசர் போதும்: வைகோ சீற்றம்
சென்னை: திமுகவை அழிக்க அதன் பட்டத்து இளவரசரே போதும் என்றும் அக்கட்சி முடிந்து போன கேஸ் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்துவரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு வைகோ இன்று அளித்த பேட்டியில், "திராவிடர் இயக்கத்தால்தான் இந்த மாநிலம் மோசமாக போய்விட்டது என்ற ஒரு விமர்சனம் வருகிறது. இதற்கு காரணம், திமுக, அதிமுகவின் தலைமை செய்த தவறுகள்தானே தவிர திராவிட இயக்கத்தின் தவறு கிடையாது.

அண்ணா தனது வாரிசுகளை அரசியலுக்கு அழைத்துவரவில்லை. ஆனால் கருணாநிதி வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவந்தார். அதன்விளைவாக ஊழல் பெருகியது. இதனால் திராவிட இயக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்போது மதிமுகவும், திமுக, அல்லது அதிமுகவுடன் சேர்ந்தால், திராவிட இயக்கம் மொத்தமும் தூற்றுதலுக்கு உள்ளாகும்.
எனவே திராவிட இயக்கத்தை காக்கும் அரணாக மாறி மதிமுக இரு கட்சிகளை விட்டும் விலகி நிற்கிறது. திமுக முடிந்து போன ஒரு கேஸ். அந்த கட்சியை அழிக்க திமுக தலைவரின் மகன் போதும். பட்டத்து இளவரசராக அறிவித்திருக்கிறார்களே (ஸ்டாலின்) அவரே கட்சியை அழிக்கபோதும். பொறுத்திருந்து பாருங்கள். திமுகவில் பலரும் குமுறிக்கொண்டுள்ளார்கள். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications