சென்னை அருகே பயங்கரம்... சர்ச்சுக்குள் புகுந்து திமுக கவுன்சிலரை வெட்டிக் கொன்ற 4 பேர் கும்பல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை; சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையில் திமுக கவுன்சிலர் தனசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் படப்பையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஒரு சர்ச்சிற்கு இன்று காலை திமுக கவுன்சிலர் தனசேகரன் சென்றுள்ளார். அப்போது சர்ச்சிற்குள் நுழைந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தனசேகரனை வெட்டி கொலை செய்தது. இவர்கள் யார் என்ற விவரமோ, எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரமோ இன்னும் தெரியவில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை. சர்ச்சில் கூட்டம் இருந்தது. இந்த நிலையில் நடந்துள்ள இக்கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications