சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்

தமிழக சட்டசபையில் இன்று அதிமுகவின் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் தெரிவித்த கருத்துக்கு திமுக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கொண்டு விஜயபாஸ்கர் தெரிவித்த கருத்தை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால் இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதேபோல் விஜயபாஸ்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்குள் தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை அனுமதிக்க முடியாது என்று கூறிய சபாநாயகர், தர்ணாவில் ஈடுபட்ட தேமுதிகவின் 11 எம்.எல்.ஏக்களையும் சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் இருந்து தொடர்ந்து 3வது முறையாக திமுகவினர் வெளியேற்றப்பட்டுள்ளதால் 3 முறை வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கடந்த 23ந் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டம் நாளை வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications