அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!
தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

திமுகவில் வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளராக உள்ள இவர் தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூரை மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறார். மேலும் அங்கு தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டும் எதிர்பார்க்கிறார்.
இதனிடையே அரசியலை கடந்து கல்வி என்று வந்துவிட்டால், உதவிக் கேட்டு வரும் மாணவர்களின் குடும்பத்தினர் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை இவர் பார்ப்பதில்லை. பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம், நீட் கோச்சிங் கட்டணம் என குறைந்தது ஆண்டுக்கு 250 மாணவர்களுக்காவது நிதி உதவி செய்கிறார்.

இதன் காரணமாகவே கட்சிக்கு அப்பாற்பட்டு அய்யாதுரை பாண்டியனுக்கு சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் மிகுந்த செல்வாக்கு காணப்படுகிறது. மேலும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்காக சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூரில் இரண்டு வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி அப்பகுதி இளைஞர்களை ஈர்த்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் கட்டணம் செலுத்த வசதியில்லாத 7 மாணவிகளின் 5 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை அய்யாதுரைபாண்டியனே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பணமிருந்தும் கொடுக்க மனமில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இவரை போன்ற நபர்கள் வெகு சிலரே அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications