மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை கோரி வழக்கு... சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மாநில தகவல் ஆணையத்தின், தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் ஆணையர்களாக தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு, பதவியேற்றுள்ளனர்.

rs bharathi dmk

இதற்கு, தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர்களது நியமனத்தில் சட்ட விதகள் மீறப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஆளுநர் ரோசையாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் நேற்று அளித்துள்ளார்.

இந்நிலையில், தி.மு.க., அமைப்பு செயலரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி, மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்தும், செயல்பட தடை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+