தென் மண்டலத்தில் அதிமுகவை வீழ்த்தி அதிக இடங்களில் வென்ற திமுக
சென்னை: தமிழக தேர்தல்களில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகளை கொடுத்து வந்த தென்மண்டலம் இம்முறை திமுகவுக்கு சாதகமாக திரும்பியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் 23 தொகுதிகளில் திமுக 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு கொங்கு மண்டல மாவட்டங்கள் தொகுதிகளை அப்படியே அள்ளி கொடுத்தன. இதனால் அந்த கட்சி ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளைக் கொண்டது. இந்த முறை நிலைமை தலைகீழாய் திமுகவுக்கு சாதகமாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மொத்தம் 6 தொகுதிகளையுமே திமுக அணி அள்ளியுள்ளது. இதில் திமுக- 3; காங்கிரஸ் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 7 தொகுதிகளில் அதிமுக 5-ஐயும் திமுக 2- தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் திமுக, அதிமுக 2 கட்சிகளுமே தலா 5 தொகுதிகளில் வென்றுள்ளன.
இந்த மாவட்டங்களின் மொத்தம் உள்ள 23 தொகுதிகளில் திமுக 13; அதிமுக 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஒருகாலத்தில் திமுக, நெல்லை எங்களுக்கு தொல்லை என ஒதுக்கி வைத்திருந்தது... இப்போது நெல்லையும் குமரியும் தோழனாக திமுகவுக்கு தோள் கொடுத்திருக்கிறது அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications