ஆர்.கே நகரில் சூரியன் பிரகாசமாக உதிக்கும்.. ஸ்டாலின் நம்பிக்கை
ஆர்கே நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க உள்ள இடைதேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேட்பாளரை தலைமைக் கழகம் தேர்ந்தெடுக்கும் என திமுக செயல் தலைவர் கூறினார்.
சென்னை: ஆர்கே நகரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என திமுக செயல் தலைவர் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடபெறும் போராட்டத்தில் பங்குகொள்வதற்காக ராமேஸ்வரம் செல்லும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், ஆர்கே நகர் வெற்றி வாய்ப்புக் குறித்து பேட்டி அளித்தார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஆர்கே நகர் இடைதேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்துக் கேட்டக் கேள்விக்கு பதிலளித்த மு.க ஸ்டாலின், ஆர்கே நகர் தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், திமுக வேட்பாளர் யார் என்பதை இன்றிலிருந்து 13 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை பரிசீலித்து, வேட்பாளர் யார் என தலைமைக் கழகம் அறிவிக்கும் என கூறினார்.
மேலும் சென்னை மற்றும் முழுவதும் நிலவும் தண்ணீர் தட்டப்பாடு குறித்து கேட்டதற்கு, சென்னை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அம்மையார் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பிருந்தே இந்த நிலை தொடர்கிறது.ஆனால், தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை குறித்து, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியாளர்கள் கவலைப்படுவதாக இல்லை எனக் கூறினார்.
மீனவர் போராட்டம் குறித்து கேட்ட கேள்விக்கு, மீனவர் பிரச்சனைக்கு ஆரம்பத்தில் இருந்து திமுகதான் குரல் கொடுத்து வருகிறது. ஏற்கனவே எங்கள் துணைப் பொது செயலாளர் துரைமுருகன் நேரில் சென்று ஆறுதல் கூறிவந்திருக்கிறார். இப்போது செயல்தலைவர் என்ற முறையில் நானும் அம்மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் செல்கிறேன் என தெரிவித்தார்.
ஆந்திர மாநில காவல்துறை, 187 தமிழர்களை செம்மரம் கடத்தியதாகக் கூறி கைது செய்து, கொடுமை செய்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என கூறினோம். இப்போதும் அதையே தான் வலியுறுத்துகிறோம் என்றார்.
-
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications