காவிரி: சென்னையில் 30 இடங்களில் மறியல்: திமுகவினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சென்னையில் 30 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 2-ஆம் திமுக உள்ளிட்ட கட்சிகளும், ஏப். 3 -ஆம் தேதி அதிமுகவும் போராட்டத்தை அறிவித்துள்ளன.

அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

காவிரிக்காக போராட்டம்
இந்த கூட்டம் நடைபெற்ற உடன் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் திடீரென சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சென்றனர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 இடங்களில்
இதைத் தொடர்ந்து சாலை மறியிலில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களை போலீஸார் கைது செய்து விடுவித்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் 30 இடங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஞ்சல் நிலையம்
சென்னை அண்ணா சாலையில் எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி போராட்டம்
எழும்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications