கனிமொழி பிறந்த நாளை ஒரு வாரம் கொண்டாடும் திமுக வழக்கறிஞர்
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரும், மாஜி கவுன்சிலருமான ருக்மாங்கதன் ஏற்பாடு செய்துள்ளார்.
ஜனவரி 3ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு இந்தக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 5ம் தேதி கனிமொழியின் பிறந்த நாளாகும்.
நலத் திட்ட உதவிகள் வழங்குவது, வக்கீல்களுக்கு சீருடை வழங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வழக்கறிஞர் ருக்மாங்கதன் ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று கேக் வெட்டி
இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் அருகே மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி தலைமையில் கேக் வெட்டப்படுகிறது.

நாளை ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை
4ம் தேதி எழும்பூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் விழா, 105வது வட்ட திமுக பகுதி பிரதிநிதி தமிழரசு தலைமையில் நடைபெறுகிறது.

5ம் தேதி ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை
நேரு பூங்கா குடிசை மாற்று வாரியத்தில் 72வது வட்ட திமுக துணை செயலாளர் கருணாகரன் தலைமையில் 5ம் தேதி ஏழை, பெண்களூக்கு இலவச சேலை வழங்கப்படுகிறது.

7ம் தேதி வக்கீல்களுக்கு இலவச சீருடை
சேத்துப்பட்டு ஆதரவற்ற மகளிர் இல்லத்தில் 6ம் தேதி பெண்களூக்கு இலவச சேலை வழங்கப்படும். எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் சுகுமார் தலைமையில் வக்கீல்களுக்கு 7ம் தேதி சீருடை வழங்கப்படுகிறது.

8ம் தேதி பொற்கிழி
சைதாப்பேட்டை கோர்ட் முன்பு 8ம் தேதிவக்கீல் பிரேம்சந்தர் தலைமையில் மாணவர்களுக்கு புத்தக பையும் எழும்பூரில் திமுக முன்னோடிகளூக்கு பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

9ம் தேதி கண் சிகிச்சை மையம்
9ம் தேதி 106 வது வட்ட திமுக துணை செயலாளர் மஸ்தான் தலைமையில் கண்சிகிச்சை முகாம் நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications