சேகர் ரெட்டி வழக்கில் ஆர்பிஐ அந்தர் பல்டி கறுப்புப் பண ஒழிப்பின் தோல்வியே- ஸ்டாலின் பொளேர்
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை என ஆர்பிஐ கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
சென்னை : குட்கா ஊழல் விசாரணை வேண்டுமென்றே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தனது தொகுதியான சென்னை கொளத்தூரில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஸ்டாலின் கூறியதாவது:

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களைக் குறித்து வைக்காததால், அது எந்த வங்கியின் பணம் என்று சி.பி.ஐ.,க்குத் தெரிவிக்க முடியவில்லை என்று வழக்கு விசாரணையில் ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான அச்சகங்களில் அச்சிடப்பட்ட பணம் பற்றி நாட்டின் தேசிய வங்கியான ரிசர் வங்கிக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்? மூன்று மாதங்களில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யவேண்டிய வழக்கில், ரிசர்வ் வங்கியின் முறையற்ற பதில்களால் வேண்டுமென்றே வழக்குத் தாமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கை ரத்து செய்ய சேகர் ரெட்டி நீதிமன்றத்தில் கோரி உள்ளார். அரசியல் நோக்கத்திற்காக சேகர் ரெட்டியைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி துணை போகிறதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையே கறுப்புப் பண ஒழிப்பில் மோடி அரசின் தோல்வியைக் காட்டுகிறது.
சேகர் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடைய அமைச்சர்களின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ஏன் எந்த மேல் நடவடிக்கையும் இல்லை . குட்கா ஊழல் விசாரணையையும் காரணம் இல்லாமல் உள்நோக்கத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications