மதுரை: பணப்பட்டுவாடா தகராறு… திமுக உட்கட்சி மோதலில் நிர்வாகி மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை திருநகர் அருகே தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று நிர்வாகிகளிடையே ஏற்பட்ட உட்கட்சி தகராறில் திமுக நிர்வாகி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தி.மு.க.,ஒன்றிய இலக்கிய செயலாளர் நிலையூர் பாண்டி(52) இவருக்கும் செல்வம் பி.எஸ்.என்.எல் மாநில தொழில் தலைவருக்கும் வியாழக்கிழமையன்று நிலையூர் மந்தையில், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் சமரசம் ஏற்பட்டு செல்வத்தை காரில் அனுப்பி விட்டனர். பின்னர் நிலையூர் பாண்டி, வேலு , சுப்பிரமணி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு பாண்டியை தள்ளி விட்டதில் அவர் மரணமடைந்தார்.
நிலையூர் பாண்டிக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications