திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை அதிமுக கோட்டையாக்கிடுவீங்களோ? 'நத்தத்துக்கு' ஐ. பெரியசாமி சவால்
திண்டுக்கல்: ஆத்தூர் தொகுதியில் மீண்டும் 50 ஆயிரம் வாக்குகள் திமுக பெறும். இதனை தடுக்க அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் தயாரா? என திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குசாவடி முகர்கள் கூட்டம் அய்யம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில் குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் மக்கள் ஆதரவு திமுகவிற்கு அதிகரித்துள்ளது. இங்கு நான் பிரகடனப்படுத்துகிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கபட்டுள்ள முதியோர் உதவி தொகை அனைவருக்கும் அவர்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும். மு.க.ஸ்டாலின் சொன்னது போல் தழிழகத்தில் லோக்ஆயுத் கொண்டு வரப்பட்டு வேலை வாய்ப்புகளில் லஞ்ச, லாவண்யம் முழமையாக தடுக்கப்படும்.
கடந்த முறைபோல் ஆத்தூர் தொகுதியில் திமுக 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றி பெரும். இங்கு வந்து ஆத்தூரை அதிமுக கோட்டை ஆக்குவேன் என்று மார்தட்டும் நத்தம் விசுவநாதனால் வெற்றியை தடுக்க முடியுமா? இதனை நான் சாவாலாக சொல்லி கொள்கிறேன். வரும் தேர்தலில் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு அனைவரும் ஒருகிணைந்து பாடுபடவேண்டும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications