கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன் கூடிய தொண்டர்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக, திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அவரின் கோபாலபுரம் இல்லம் முன் கூடியுள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக, திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அவரின் கோபாலபுரம் இல்லம் முன் கூடியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர் நலமுடன் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக, திமுக தொண்டர்கள் பலர் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துள்ளனர். அதேபோல், பொதுமக்கள் பலரும் அங்கு கூடி இருக்கிறார்கள். அதிகாலையில் இருந்து அங்கு பலர் கூடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. போலீஸார் பலர் அங்கே குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். கருணாநிதி வீட்டை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகள் இரும்பு தடுப்புகளால் தடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று நிறைய தலைவர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.