கேகேஎஸ்எஸ்ஆர், சேகர்பாபு உட்பட திமுகவில் உள்ள மாஜி அதிமுகவினருக்கும் குறிவைக்கிறது ஓபிஎஸ் அணி?
திமுகவில் தற்போது எம்.எல்.ஏக்களாக இருக்கும் மாஜி அதிமுகவினரையும் வளைத்துப் போடும் முயற்சியில் ஓபிஎஸ் அணி இறங்கியுள்ளதாம்.
சென்னை: திமுகவில் தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள மாஜி அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அணி குறிவைத்திருக்கிறது என அந்த கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்து திமுக ஆட்சி அமைக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் திமுக, ஜனநாயக வழியில்தான் ஆட்சிக் கட்டிலில் அமருவோம்; கொல்லைப்புறமாக அமரமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டது.
திமுக நினைத்திருந்தால் நிச்சயம் குதிரைபேரம் மூலமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க முடியும்தான். இதை திமுக செயல் தலைவர் ஸ்டாலினே பல இடங்களில் சுட்டிக்காட்டியும் பேசிவந்தார்.

மாஜி அதிமுகவினருக்கும் வலை
இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுகவில் உள்ள மாஜி அதிமுகவினரும் கூட ஓபிஎஸ் அணிக்கு வரக் கூடும் என்கிற தொணியில் அந்த கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி டிவி விவாதத்தில் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நியூஸ் டிவி 18 தமிழ்நாடு சேனலின் காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் கேசி பழனிச்சாமி கூறியதாவது:

மீண்டும் ஒரு கூவத்தூர்
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூரை சந்திக்கும். அப்போது ஓபிஎஸ் அணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் வருவார்கள். திமுகவில் உள்ள எங்கள் முன்னாள் சகாக்களும் கூட வருவார்கள். இவ்வாறு கே.சி. பழனிச்சாமி கூற அரங்கம் அதிர்ந்து போனது.

யார் யார்?
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போனவர்களில் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், சேகர் பாபு உள்ளிட்டோர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இவர்களில் சேகர்பாபுவின் உறவினர்தான் ஓபிஎஸ் அதிமுகவின் ஆர்கே நகர் வேட்பாளர் மதுசூதனன்.

சலசலப்பு சேகர்பாபு
ஆர்கே நகர் தேர்தல் தொடர்பான மாவட்ட செயலாளர் கூட்டத்திலேயே, அதிமுக வாக்குகள் நமக்கு வராது; திமுக வாக்குகள் விலைபோகாமல் பார்க்க வேண்டும் என பேசி சலசலப்பை உருவாக்கினார். தமது உறவினர் மதுசூதனன் நிற்பதாலேயே அவருக்கு ஆதரவாக வேலை பார்க்க முடிவு செய்துவிட்டாரா சேகர்பாபு என்றெல்லாம் ஆதங்கப்பட்டனர் திமுக நிர்வாகிகள்.

கேகேஎஸ்எஸ்ஆர்
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன். தற்போதைய ஓபிஎஸ் அணியினர் பலருமே ஜூனியர்கள்தான். ஒருவேளை ஓபிஎஸ் அணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும் நிலையில் திமுகவில் உள்ள மாஜி அதிமுகவினருக்கு வலைவிரிக்கப்படும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications