வேலூர் அருகே ஆளுநருக்கு திமுக கறுப்புக்கொடி! பரபரப்பு!
வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் பலப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அரசு அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில சுயாட்சி அதிகாரித்தில் தலையிடும் மத்திய அரசின் நடவடிக்கையே இது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மேலும் ஆளுநர் ஆய்வு செய்யும் இடங்களில் தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஆய்வை கண்டித்து கறுப்புகொடி காட்டி வருகின்றன.
ஆனால் ஆளுநர் ஆய்வை தமிழக அரசு வரவேற்று வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

இதனையறிந்த திமுகவினர் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டில் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மத்திய மாவட்ட திமுக வினர் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் தலைமையில் காட்பாடி விருதம்பட்டு அருகே 200க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம்! நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு.. தவெகவுக்கு சவால்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?










Click it and Unblock the Notifications