நீங்க ராஜ்யசபா சீட் பெறவும் மத்திய அமைச்சர் பதவி பெறவும் உதவியவர் கருணாநிதிதானே..
வன்னிய சமுதாயத்தின் காவலனாக தொன்று தொட்டு நின்று வரும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை குறை சொல்ல இந்த சமுதாயத்திற்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொல்வதற்கு தார்மீக உரிமை இல்லை.
மத்திய அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் அன்புமணி. மத்திய அரசு பணியில் வன்னியர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்பது பற்றி என்றைக்காவது அவர் கோரிக்கை வைத்தது உண்டா? அது போகட்டும் வன்னியர் சமுதாய நலனிற்காக என்றைக்காவது ஒரு நாள் பாராளுமன்றத்தில் இவர் பேசியதுண்டா?

தமிழுக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்கிறார் அன்புமணி ராமதாஸ். இதோ அவரது தந்தை, கருணாநிதி சமச்சீர் கல்வி கொண்டு வந்தபோது பாராட்ட வில்லையா? அக்கல்வியை அடித்தட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சி என்பது அன்புமணிக்கு ஞாபகம் இல்லையா? ஏன் அவரது தந்தை "செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கருணாநிதி முதலமைச்சராக அதை நல்ல முறையில் செய்தார்" என்று பாராட்டினாரே அதையும் அன்புமணி மறந்து விட்டாரா?
ஏன் டாக்டர் அன்புமணி ராஜ்யசபா சீட் பெறுவதற்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக வருவதற்கும் உதவி செய்தவர் தலைவர் கருணாநிதிதான்.. தி.மு.க.வை விமர்சிக்கும் முன்பு அதை தன் நெஞ்சில் கைவைத்து ஒரு முறை யோசித்துக் கொள்ள வேண்டும். அப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரானவர் என்ன செய்தார்?












Click it and Unblock the Notifications