சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம்: ஓ.பி.எஸ். பணம் கொடுக்க உத்தரவிட்டதாக திமுக பரபரப்பு புகார்!
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் தர முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் உத்தரவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூறியுள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் விநியோகிக்க உத்தரவிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் முகாமிட்டுள்ள மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் அனில் குமார் ஷாவிடம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் நேரில் புகார் அளித்துள்ளனர்.

அதில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போன் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், நேரிலும் புகார் கூறி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஸ்ரீரங்கம் பகுதிகளில் தங்கி இருந்து பண விநியோகம் செய்து வருகின்றனர். 50 வாக்காளர்களுக்கு ஒரு அ.தி.மு.க.வினர் என தெருவிற்கு தெரு அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்து வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டும் இதை தடுக்க முடியவில்லை.
எனவே இந்த இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் சிறப்பு பார்வையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் மீதும், ஜன நாயகத்தின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீணாகி விடும் என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதி, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. பணம் விநியோகத்தின்போது பிடிபட்ட பல்வேறு அதிமுகவினரிடம் நடத்திய விசாரணையில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுபடியே பணம் விநியோகிகப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சக்சேனாவிடமும் புகார்
இதேபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனுவை அளித்துள்ளது.
-
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ












Click it and Unblock the Notifications