சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம்: ஓ.பி.எஸ். பணம் கொடுக்க உத்தரவிட்டதாக திமுக பரபரப்பு புகார்!
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் தர முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் உத்தரவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூறியுள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் விநியோகிக்க உத்தரவிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் முகாமிட்டுள்ள மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் அனில் குமார் ஷாவிடம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் நேரில் புகார் அளித்துள்ளனர்.

அதில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போன் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், நேரிலும் புகார் கூறி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஸ்ரீரங்கம் பகுதிகளில் தங்கி இருந்து பண விநியோகம் செய்து வருகின்றனர். 50 வாக்காளர்களுக்கு ஒரு அ.தி.மு.க.வினர் என தெருவிற்கு தெரு அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்து வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டும் இதை தடுக்க முடியவில்லை.
எனவே இந்த இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் சிறப்பு பார்வையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் மீதும், ஜன நாயகத்தின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீணாகி விடும் என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதி, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. பணம் விநியோகத்தின்போது பிடிபட்ட பல்வேறு அதிமுகவினரிடம் நடத்திய விசாரணையில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுபடியே பணம் விநியோகிகப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சக்சேனாவிடமும் புகார்
இதேபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனுவை அளித்துள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications