For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாய சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்.. ஸ்டாலின் அறிக்கை!

விவசாய சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வருட தொடங்கமே டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்துடன் தொடங்கி இருக்கிறது. இதனால் காவேரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

DMK will protest with farmers for cauvery water - Stalin

ஜனவரி.28இல் டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடக்கும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

தற்போது விவசாய சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் தனது அறிக்கையில் ''டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். காவேரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி போராட்டம் நடக்க உள்ளது. இந்த ரயில் மறியல் போராட்டத்தில் திமுகவும் கலந்து கொள்ளும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் திமுக தொண்டர்களையும் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்புவிடுத்து இருக்கிறார்.

English summary
Stalin says DMK will protest with farmers for cauvery water. Farmers were decided to protest for seeking cauvery water on Jan.28.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X