கொசுக்களிடமும் 'அவர்' மாமுல் வாங்கிட்டாரோ.. மு.க.ஸ்டாலின் கடும் தாக்குதல்!
குட்காவுக்கு மாமுல் வாங்கியதை போல் கொசுக்களிடமும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமூல் வாங்கிவிட்டாரோ என மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், 'சுகாதாரத்துறை அமைச்சர் கொசுக்களிடமும் எதுவும் மாமூல் வாங்கிவிட்டாரா' என கிண்டலாகக் கேட்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த பல மாதங்களாக டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள வரை பலியாகி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாத காரணத்தால் தான் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது என கூறினார்.
மேலும், டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்தி வருகிறோம் என கூறுகிறார் சட்டத்தை மீறி குட்கா விற்க மாமூல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் டெங்கு கொசுக்களிடமும் ஏதேனும் மாமூல் வாங்கிவிட்டாரோ என மு.க.ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.