வாசனுக்கு செக்.. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு லக்.. ஜெயலலிதா மூவ்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மீதான கோபத்தை, அவரது கட்சியில் இருந்து பிரிந்து வந்து அதிமுகவில் ஐக்கியமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு ராஜ்யசபா சீட் கொடுத்ததன் மூலம் தீர்த்துக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா என்று தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபாவுக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 4பேர் போட்டியிடுகிறார்கள். பதவி காலம் முடிவடையும் எம்.பியான, நவநீத கிருஷ்ணன், மாஜி அமைச்சர் வைத்திலிங்கம், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி விஜயகுமார் ஆகியோரை வேட்பாளர்களாக்கியுள்ளதோடு, யாரும் எதிர்பார்க்காதவிதமாக கடந்த மாதம்தான் கட்சியில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தையும் வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.

தேர்தலுக்கு சற்று முன்பாக, கடந்த மாதம் இவர் அதிமுகவில் இணைந்திருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்கள் நல கூட்டணியோடு கூட்டணி வைத்து கொண்டது பிடிக்காமல் அவர் அதிமுக பக்கம் போனார்.
அதிமுகவுடன், த.மா.காவை கூட்டணி அமைக்க செய்ய பாலசுப்பிரமணியன் பெரிதும் முயன்று வந்தார். ஆனால், 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்க ஜெயலலிதா முடிவு செய்திருந்ததால், வாசன் கட்சியும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தினார் ஜெயலலிதா.
காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, தென்னந்தோப்பு சின்னத்தை பெற்றிருந்த வாசனால், ஜெயலலிதா கன்டிஷனுக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. 15 தொகுதிகளும், ஒரு ராஜ்சபா பதவியும் தருகிறேன் என்று கூறியும் வாசன் ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியிருந்தது.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே மக்கள் நல கூட்டணி பக்கம் போன வாசனால் ஜெயலலிதா எரிச்சலடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், எஸ்.ஆர்.பிக்கு உடனடியாக ராஜ்யசபா பதவியை தூக்கி தந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications