திருமண வாழ்க்கை தித்திக்கணுமா?: இதை 'ட்ரை' பண்ணுங்க
சென்னை: திருமண வாழ்க்கை கசப்பானதாக இருப்பதும், இனிப்பானதாக இருப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இன்று அந்த பயிர் முளைக்கத் துவங்கியதுமே கருகும் அபாயத்தில் உள்ளது. திருமணம் என்பது பலருக்கும் கசக்கும் விஷயமாகிவிட்டது. திருமணம் என்றால் ஏதோ ஆயுள் தண்டனை என்பது போன்று பலர் நினைக்கிறார்கள்.
அதற்கு காரணம் விட்டுக் கொடுத்து வாழ்வது குறைந்து வருவது தான்.

டிவி
என் மனைவி எப்பொழுது பார்த்தாலும் டிவியில் சீரியல் பார்த்து பார்த்து அழுகிறாள். சாப்பாடு கேட்டால் கூட விளம்பர இடைவேளையில் தான் தருகிறாள் என்பது பல கணவன்மார்களின் வருத்தம்.

செல்போன்
என் கணவர் எப்பொழுது பார்த்தாலும் செல்போனும் கையுமாக உள்ளார். இல்லை என்றால் லேப்டாப்போடு ஒன்றிவிடுகிறார். அந்த செல்போன், லேப்டாப்பில் என்ன கருமம் உள்ளதோ தெரியவில்லை என்பது மனைவிகளின் குமுறல்.

விட்டுக்கொடுத்தல்
கணவன் மனைவி என்று இருந்தால் தகராறு இல்லாமல் இருக்காது. அவ்வாறு சண்டை ஏற்பட்டால் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள்.

அகம்பாவம்
நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம். விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். அதன் பிறகு அதன் சுகம் புரியும். இந்த நிமிடம் மட்டுமே நிஜம் என்பதை மனதில் வைத்து சகிப்புத்தன்மையோடு வாழுங்கள். வாழ்க்கை அமைதிப் பூங்காவாக இருக்கும்.

பெண்களே
பெண்களே, சீரியல்களே கதி என்று இருக்க வேண்டாம். கணவர் கையிலும் டிவி ரிமோட்டை கொடுத்து அவர் விரும்பும் நிகழ்ச்சிகளையும் பார்க்க விடுங்கள். நீங்களும் அவர் அருகில் அமர்ந்து அவருக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பாருங்கள். இப்படி செய்தால் பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

ஆண்களே
ஆண்களே, நீங்கள் செல்போனும் கையுமாக இருங்கள். அதற்காக மனைவியிடம் இருந்து தப்பிக்கும் வழியாக செல்போனை நினைக்காதீர்கள். செல்போனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறிது நேரம் மனைவியுடன் நேரம் செலவு செய்யுங்கள்.

பேசிப் பேசியே
மனைவியுடன் நேரம் செலவழிப்பதா? காதில் ரத்தம் வரும் அளவிற்கு பேசிப் பேசி கொல்கிறாளே என்று நினைக்காதீர்கள். உங்களை விட்டால் அவர் வேறு யாரிடம் பேச முடியும்.(மனைவி பேசுவதை கவனிக்காவிட்டாலும் அவர் அருகே அமர்ந்து கவனிப்பது போன்று நடிக்கவாவது செய்யலாமே. நீங்கள் கவனிப்பது போன்று நடித்து சிக்கினால் நாங்கள் பொறுப்பல்ல.)

நச்சரிக்காதீர்கள்
கணவன் வீட்டிற்குள் நுழைந்தால் இடைவிடாமல் பேசிப் பேசி அவரை தலைதெறித்து ஓட வைக்காதீர்கள் பெண்களே. அமைதியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். பேச்சை குறையுங்கள். பேசாமல் அமைதியாக இருப்பதிலும் நிம்மதி உள்ளது என்பதை புரிந்து கொண்டால் உங்கள் கணவருக்கு பிடித்த மனைவியாக எப்பொழுதுமே இருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications