ஜெ.கன்னத்தில் இருந்த ஓட்டை.. பார்க்கவில்லை என ஏன் சொன்னார் டாக்டர்?.. மனோஜ் பாண்டியன்
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைகளை பார்க்கவில்லை என்று டாக்டர்கள் சொன்னது ஏன் என மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைகளை பார்க்கவில்லை என மருத்துவர்கள் எப்படி சொன்னார்கள் என மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ஓட்டைக்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்து 90 நாட்கள் ஆகவுள்ள நிலையில் அவரது மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான பிஎச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கத்தின் போது தெரியாது என கூறியது ஏன் என கேள்வி எழுப்பினார். மருத்துவர்களுக்கு தெரியாமல் அந்த ஓட்டை வந்ததா என்றும் அவர் கேட்டார்.
ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த ஓட்டைக்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்கள் குறித்த லாக் புக் விவரத்தை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள ஆதாரங்களுடன் எழுப்பியுள்ள கேள்விகள் மீண்டும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications