Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ்கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியுடன் யார் யாருக்கு தொடர்பு... கண்காணிக்கும் அதிகாரிகள்

சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய டைரிதான் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகளின் முக்கிய ஆவணமாக உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த வாரம் நடந்த வருமான வரி சோதனையில் பெட்டி பெட்டியாக பணம், கட்டி கட்டியாக தங்கம் கைப்பற்றப்பட்டது.
அவரது டைரி எடுத்து சென்ற அதிகாரிகள், ரெட்டியுடன் தொடர்பில் இருந்த 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்களாம்.

இதன் அடிப்படையிலேயே ராம மோகன் ராவ், அவரது மகன், சம்பந்தி வீடுகளில் ரெய்டு நடத்தியுள்ளனர். ராம மோகன ராவின் நேர்முக உதவியாளர்களான சேகர், குமார் ஆகியோரிடம் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

ஜெயலலிதா இறுதிச் சடங்கு நடைபெற்ற 6ம் தேதியன்று சேகர் ரெட்டியுடன், ராம மோகன ராவ் நீண்ட நேரம் பேசியுள்ளார். அப்போது பண பரிமாற்றம் குறித்து அவர்கள் பேசியதை செல்போன் நிறுவனங்களில் இருந்து பெற்றிருக்கின்றனராம்.

சேகர் ரெட்டியின் டைரி

சேகர் ரெட்டியின் டைரி

சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள தகவல்கள், ஆவணங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்ததில், அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் ஆகியற்றில் ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோருக்கு சொந்தமானவையும் அடக்கம் என தெரிய வந்துள்ளது. சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய பிரமுகர்கள், மேலும் 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

வீடியோ ஆதரங்கள்

வீடியோ ஆதரங்கள்

வட மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், மேற்கு மண்டலத்தில் செல்வாக்காக இருக்கும் அமைச்சர் ஒருவர் என 4 அமைச்சர்கள் நெருங்கிய தொழில் தொடர்புகளை சேகர் ரெட்டியுடன் வைத்துள்ளனர். அவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த ஆவணங்களையும், வீடியோ ஆதாரங்களையும் திரட்டும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்

ஐபிஎஸ் அதிகாரிகளில் ஏடிஜிபி, ஐஜி உள்ளிட்டோரும் சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். இவர்களுடன் நடந்த பண பரிமாற்றங்கள் மற்றும் இதர விவரங்கள் டைரியிலும், ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளதாம். சென்னை அருகே உள்ள ஒரு மாவட்ட ஆட்சியருக்கு சமீபத்தில் ஒரு கோடி ரூபாயை அவர் கொடுத்துள்ளார். அதுவும் டைரியில் இடம்பெற்றுள்ளது.

யாருக்கு எவ்வளவு பங்கு

யாருக்கு எவ்வளவு பங்கு

அரசியல் கட்சிகளுக்கு கொடுத்த பணம், தனிப்பட்ட முறையில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம் என்பதை அவர் தெளிவாக எழுதி வைத்துள்ளார். மேலும், புதிய நோட்டுகளை மாற்ற யார் யார் உதவி செய்தார்கள் என்பதையும் அவர் தெளிவாக கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம்தான் அவர் பணத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளார். இதற்கு கூட்டுறவு வங்கியில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் அதிக அளவில் உதவி செய்துள்ளனர்.

ரெய்டு தொடரும்

ரெய்டு தொடரும்

இந்த தகவல்களை எல்லாம் உறுதி செய்து கொண்ட பின்பு அடுத்தடுத்து ரெய்டுகள் நடத்தப்படலாம் என வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்தடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தும் அதிரடி சோதனை மாநில அரசியலில் பல அதிரடிகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+