வெற்றி தோல்வி சகஜம்தான்... தொண்டர்களே... தற்கொலை வேண்டாம்..!- விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், அதற்கு தற்கொலை தீர்வாகாது. அதனால், தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபட வேண்டாம் என்று விஜயகாந்த் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தி.மு.க. 98 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக அமைந்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில், தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட அனைவரும் வாஷ் அவும் ஆனதோடு டெபாசிட்டையும் பறிகொடுத்தனர்.

Dont attempt suicide Vijayakanth request DMDK workers

தே.மு.தி.க. தோல்வியை சந்தித்ததையடுத்து, மனமுடைந்த கடலூர் மாவட்டம் கொங்கராயனூர் கிளைக்கழக தே.மு.தி.க. செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும்,அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், அதற்கு தற்கொலை தீர்வாகாது. தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்க தே.மு.தி.க. மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் வாக்களர்களுக்கு பணத்தை கொடுத்து பொய்யான வெற்றியை பெற்றிருக்கின்றன" என்றும் விஜயகாந்த் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+