என்று மது அரக்கன் ஒழிகிறானோ அன்றுதான் உண்மையான விடுதலை.. ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை விட்டு என்று மது அரக்கன் ஒழிகிறானோ அன்றுதான் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். நாடு சுதந்திரமடைந்த போதிலும் கூட மது அரக்கனிடமிருந்து இன்னும் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

இந்தியாவின் 70ஆவது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைக்கு பின் 70 ஆண்டுகளை தொடுவது என்பது நிச்சயமாக ஒரு மைல்கல் தான். கடந்த காலங்களில் நமக்குத் தேவையான விஷயங்கள் கிடைக்காத போதெல்லாம், ஆங்கிலேயர்களிடம் 4 நூற்றாண்டுகள் அடிமையாக கிடந்து சுரண்டப்பட்ட நாம் இப்போது தான் விடுதலை அடைந்திருக்கிறோம். விரைவில் அனைத்து நலன்களையும், வளர்ச்சியையும் பெறுவோம் என்று நமக்கு நாமே தேறுதல் கூறிக் கொண்டு, சுய பச்சாதாபத்திலேயே வாழ்க்கையை கடத்தி வந்தோம். இந்தியா விடுதலையடைந்து 70 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இனியும் அனைத்து துறைகளிலும் தற்சார்பு அடையாததற்கான காரணங்களை பட்டியலிட்டு கொண்டிருக்க கூடாது. மாறாக, நம் சாதனைகள் பட்டியலிடப்படவேண்டும்.

நாம் சாதித்தது என்ன?

நாம் சாதித்தது என்ன?

இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நாம் சாதித்தது என்ன? என்பதை ஆராய்ந்து பார்த்தால், நாம் பெற்றதைவிட இழந்தது தான் அதிகமாக இருக்கிறது. அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நாம் முன்னேறியிருக்கிறோம். அவை நமது படை வலிமையை உயர்த்த பயன்பட்ட அளவுக்கு, பசியையும், வறுமையையும் ஒழிக்க பயன்படுத்தப் படவில்லை. மத்திய, மாநில அரசுகள் கடை பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் கோடீஸ்வரர்களை பெருங்கோடீஸ்வரர்களாகவும், ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.

எதை இலவசமாக தர வேண்டும்?

எதை இலவசமாக தர வேண்டும்?

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி, சுகாதாரம் ஆகிய சேவைகளும், விவசாயத்திற்கான தேவைகளும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், கல்விக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பொறியியல் பட்டதாரிகள் தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் கட்டணம் செலுத்த வழியில்லாததால் பெற்ற குழந்தையையே ஏழைப்பெண் ஒருவர் விற்ற செய்தி இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி நமது கண்களில் கண்ணீரை வழவழைத்தது.

அதிகரித்துக் கொண்டே போகும் உழவர்களின் துயரம்

அதிகரித்துக் கொண்டே போகும் உழவர்களின் துயரம்

இன்னொரு பக்கம் உழவர்களின் துயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவு உற்பத்தியில் இலக்கை எட்ட முடியாத இந்தியாவில் உழவர்களின் தற்கொலை மட்டும் இலக்கில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படையையே வலுப்படுத்த முடியாத நிலையில், வளர்ச்சியைப் பற்றி பேசுவதும், வல்லரசாக அறிவித்துக் கொள்ளத் துடிப்பதும் நடிப்பாகவே இருக்கும். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் அனைத்துக்கும் 1940&களின் இறுதியில் தான் விடுதலை கிடைத்தது. இந்தியாவுடன் விடுதலை பெற்ற காமன்வெல்த் நாடுகளின் இன்றைய நிலையையும், இந்திய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் நாம் எங்கு இருக்கிறோம் என்பது நமக்கு உறைக்கும். ஆங்கிலேயரிடம் அடிமைப்படாத, ஆனால், ஒரு கட்டத்தில் இந்தியாவை விட மோசமான நிலையில் இருந்த தென்கொரியா அடைந்ததில் பத்தில் ஒரு பங்கு வளர்ச்சியைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை. இந்தியாவின் மனித வளம் இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுவதை விட, இந்தியாவை பெரும் சந்தையாக்கி உலக நாடுகளின் வளர்ச்சிக்குத் தான் உதவியாக உள்ளது.

மறுக்கப்படும் தமிழக உரிமைகள்

மறுக்கப்படும் தமிழக உரிமைகள்

தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், காவிரி முதல் பாலாறு வரை அனைத்து நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்திற்கான உரிமைகள் மட்டும் அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர்கள் தங்கள் மாநிலத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் அளவுக்கு அவர்கள் மனதை அரசியல் குறுக வைத்துள்ளது. இன்னொருபுறம் மது அரக்கனின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் மதுவை முழுமையாக ஒழிக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின்படி 500 மதுக்கடைகளை மூடி, விற்பனையை 2 மணி நேரம் குறைத்த போதிலும் அதனால் பயனில்லை.

மது அரக்கனின் கொடூர முகம்

மது அரக்கனின் கொடூர முகம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையான நிலை மாறி 4 வயது குழந்தைக்கு மது புகட்டப்படும் கொடுமை அரங்கேறியது. அடுத்தக்கட்டமாக பிறந்து 10 மாதமே ஆன குழந்தைக்கு அதன் தந்தையே மது புகட்டும் கொடூரம் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் துயரங்களுக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மது தான். மதுவிலிருந்து தமிழகத்திற்கு எப்போது விடுதலை கிடைக்கிறதோ அப்போது தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். இத்தகைய மது அரக்கனை ஒழிக்கவும், மக்களின் துயரங்களை போக்கவும், அமைதி, வளம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை வளர்க்கவும் இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+