தமிழக இளைஞரை மிகக் குரூரமாக கொன்ற கர்நாடக அதிகாரி.. ராமதாஸ் கடும் கண்டனம்

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாதேஸ்வரன்மலையை ஒட்டிய காவிரி எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக மாநில வனத்துறையினரால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, இராஜா ஆகியோருடன் பழனி கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருமாநில எல்லைப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர் பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவரும் காயமடைந்தனர்.
அவர்களில் முத்துசாமி, இராஜா ஆகியோர் தப்பி வந்துவிட்ட போதிலும், பழனியை மட்டும் காணவில்லை. அவரை தேடிவந்த அப்பகுதி மக்கள், கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் பழனியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
பழனியின் இடது கை வெட்டப்பட்டும், பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்ததுடன், தலையில் வெட்டுக்காயங்களும், மார்பில் குண்டு பாய்ந்த காயங்களும் காணப்பட்டன. கர்நாடக வனத்துறையினர் பழனியை பிடித்து சித்திரவதை செய்து, கடைசியில் சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று தெரியவந்திருக்கிறது. தமிழ் இளைஞர் பழனி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது சேலம் மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கான உதவி வனப்பாதுகாவலராக உள்ள வாசுதேவ மூர்த்தி என்ற அதிகாரி தான் இந்த படுகொலைக்கு பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருமாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளோ அல்லது இரு மாநில மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளோ இந்த படுகொலைக்கு காரணம் இல்லை; மாறாக வாசுதேவ மூர்த்தி என்ற வனத்துறை அதிகாரியின் அரக்கத்தனமான அணுகுமுறை காரணமாகவே பழனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வனத்துறை அதிகாரியின் மனிதநேயமற்ற இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படுகொலைக்கு காரணமான வனப் பாதுகாவலர் வாசுதேவமூர்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி கொல்லப்பட்டதால் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ள நிலையில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிதி உதவியும் வழங்க தமிழக - கர்நாடக அரசுகள் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications