தமிழக இளைஞரை மிகக் குரூரமாக கொன்ற கர்நாடக அதிகாரி.. ராமதாஸ் கடும் கண்டனம்

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாதேஸ்வரன்மலையை ஒட்டிய காவிரி எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக மாநில வனத்துறையினரால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, இராஜா ஆகியோருடன் பழனி கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருமாநில எல்லைப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கர்நாடக மாநில வனத்துறையினர் பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவரும் காயமடைந்தனர்.
அவர்களில் முத்துசாமி, இராஜா ஆகியோர் தப்பி வந்துவிட்ட போதிலும், பழனியை மட்டும் காணவில்லை. அவரை தேடிவந்த அப்பகுதி மக்கள், கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் பழனியின் உடலை கண்டெடுத்துள்ளனர்.
பழனியின் இடது கை வெட்டப்பட்டும், பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டும் இருந்ததுடன், தலையில் வெட்டுக்காயங்களும், மார்பில் குண்டு பாய்ந்த காயங்களும் காணப்பட்டன. கர்நாடக வனத்துறையினர் பழனியை பிடித்து சித்திரவதை செய்து, கடைசியில் சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று தெரியவந்திருக்கிறது. தமிழ் இளைஞர் பழனி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது சேலம் மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கான உதவி வனப்பாதுகாவலராக உள்ள வாசுதேவ மூர்த்தி என்ற அதிகாரி தான் இந்த படுகொலைக்கு பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருமாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளோ அல்லது இரு மாநில மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளோ இந்த படுகொலைக்கு காரணம் இல்லை; மாறாக வாசுதேவ மூர்த்தி என்ற வனத்துறை அதிகாரியின் அரக்கத்தனமான அணுகுமுறை காரணமாகவே பழனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வனத்துறை அதிகாரியின் மனிதநேயமற்ற இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படுகொலைக்கு காரணமான வனப் பாதுகாவலர் வாசுதேவமூர்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி கொல்லப்பட்டதால் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ள நிலையில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிதி உதவியும் வழங்க தமிழக - கர்நாடக அரசுகள் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications